சர்வதேச விண்வெளி அமைப்பான நாசா , மற்றும் ஸ்பேஸ் எக்ஃஸ் போன்ற அமைப்புகள் , சமீப காலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறது. அதில் ஒரு பாகமாக. நாசாவின் கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் புதிதாக ஒரு சில விஷயங்களை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது,


Sample
அதாவது. விண்வெளியில் பயனம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையான கதிரியக்க பிரச்சனையை தீர்க்க. நாசா அமைப்பானது தனது கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் (Galactic Cosmic Rays) பிரபஞ்ச கதிரியக்கத்தினை ஒரு சோதனை முறையில் உருவகப்படுத்தி அதனை விண்வெளி வீரர்களுக்கு பயன் படும்வகையில் ஆக்க போவதாக கூறியுள்ளது.
இந்த பிரபஞ்ச கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. சொல்லப்போனால் ஒட்டு மொத்த பூமியையுமே நமது வளிமண்டலத்தில் உள்ள காந்த அடுக்கமானது . இந்த மாதிரியான சூரிய கதிர் வீச்சிலிருந்தும், பிரபஞ்ச கதிர்வீச்சிலிருந்தும் பாதுகாத்து வருகிறது. இதனை நாசா அமைப்பானது , பூமியில் செயற்கையாக உருவகப்படுத்து. விண்வெளி வீரகளுக்கு பயிற்சி அளிக்க போவதாக கூறியுள்ளது. இதனால் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.